“ஓம்“ என்பதன் பொருள் ”ஓம்” தான்.
அதற்கும் மேலாக விளக்கம் கூறப் பலரும் முயனறுள்ளனர்.
”ஓம்” எனும் ப்ரணவ உண்மையின் பொருளே என விநாயகரை வர்ணிக்கின்றனர்.
இதுவும் விளக்கம் கூறும் முயற்சியே.
ஔவையார் வழிபட்ட விநாயகர் காரணமாக “விநாயகர் அகவல்” உருவானது.
அந்த அகவல் உண்மையில் ஒரு யோக சாதனம் அல்லது சாசனம என்றும் கூறலாம்.
”உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து”
இதனால் ஔவையார் ஒரு யோகினி என்பது புலனாகின்றது.