சிவனார் மனம் குளிர

”சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா!”
இது திருப்புகழ்ப் பாடல் ஒனறன் முதல் வரி.
சிவனார்? என்றால், சிவன் ஆர்?
இதற்கு விடை, இதே திருப்புகழில் உள்ளது.
”சீவன் சிவச் சொரூபம் எனத் தேறி, நான் என்பதற்றுயிரோடூனென்பதற்று வெளி நாதப்பரப்பிரம்ம ஒளி மீதே.”
சிவன் – பரமசிவன்
சிவன் வேறு, சீவன் வேறு அல்ல.
அனைத்தும் ஒன்றே.
சிவனார் மனம் குளிர என்ன நடந்தது?
”சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குரு நாதா.”
சிவ பெருமானுடைய குரு, சிவ பெருமானுக்கு மந்த்ர உபதேசம் செய்கின்றார்.
சிவ பெருமானுக்கே குருவாக வருபவர் அவருடைய மகன் முருகன்.
என்ன மந்த்ரம் உபதேசிக்கப்படுகின்றது?

Leave a Reply