சந்திரனும், சூரியனும், ஆகாயமும் கூட அழகானவைகளே. மழை பெய்கின்றது. மழைத்துளி வீழ்வதை , அதன் அழகை ரசித்ததுண்டா?
சிறுவர், சிறுமியரைப் பாருங்கள். கை கொட்டிச் சிரித்து , ஆரவாரித்து அவற்றைக் கைகளில் ஏந்தி மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சி கூட அழகுதான்.
அழகுக்கு அழகு என்பார்கள். ஆலயங்களில் விக்கிரகங்கள், சிலைகள், சிற்பங்கள் எனப் பலவற்றைக் காணலாம். அவற்றை உருவாக்கிய சிற்பாசாரியார்கள்
அவற்றைத் தமது உள்ளத்திலே உண்முகமாகக் கண்ட தோற்றங்களை அப்படியே கற்களிலும், உலோகங்களிலும் உருவங்களாக வடிக்கின்றார்கள்.
அவற்றின் அழகில் ஏதும் குறையில்லை.
எனினும் அவற்றைத் துணிகளால் மூடிப் பல் வேறு ஆபலணங்களை அணிவித்து, மேலும் பல மலர் மாலைகளால் மூடி மறைத்து விடுகையில்
அவற்றின் உண்மையான அழகு காணாமற் போய் விடுகின்றது. இப்படியாகச் செய்வதனால் யாருக்கு என்ன பயன்?
ஸ்வாமி விபுலானந்தருடைய பாடல் நினைவுக்கு வருகின்றது.
” வெள்ளை நிற மல்லிகையோ, வேறெந்த மா மலரோ, வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளை நிறப்புவுமல்ல, வேறெந்த மலருமல்ல, உள்ளக் கமலமடி உத்தமனார் வேணடுவது.”