அபிராமி அந்தாதி, கணபதி காப்பு.

தார் அமர் கொன்றையும், சண்பக மாலையும்,சாத்தும் தில்லை
ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி, எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே,
கார் அமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே!
- அபிராமி அந்தாதி, கணபதி காப்பு.

Posted in அபிராமி அந்தாதி | Tagged , , , | Leave a comment

சிவனார் மனம் குளிர 3

“ஓம்“ என்பதன் பொருள் ”ஓம்” தான்.
அதற்கும் மேலாக விளக்கம் கூறப் பலரும் முயனறுள்ளனர்.
”ஓம்” எனும் ப்ரணவ உண்மையின் பொருளே என விநாயகரை வர்ணிக்கின்றனர்.
இதுவும் விளக்கம் கூறும் முயற்சியே.

ஔவையார் வழிபட்ட விநாயகர் காரணமாக “விநாயகர் அகவல்” உருவானது.
அந்த அகவல் உண்மையில் ஒரு யோக சாதனம் அல்லது சாசனம என்றும் கூறலாம்.

”உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து”

இதனால் ஔவையார் ஒரு யோகினி என்பது புலனாகின்றது.

Posted in Spiritual | Tagged , , | Leave a comment

சிவனார் மனம் குளிர 2

ப்ரணவம் – ஓங்காரம் – ஓம்
ஓங்காரம் முழு முதல் என்பதிலும் தவறில்லை.
ஓஙகாரமாய் விளங்கும் நாதம்.
இந்த நாதப் ப்ரும்மத்திலிருந்தே இந்தப் பிரபஞ்சம் உருவானது.
இந்த நாதப்பிரம்மத்தைச் சிவனார் ஏன் கேட்டார்?
குமாரனார் ஏன் விளக்கினார்?
குமாரனார் பிரும்மத்தின் பொருளை விளக்கும் படி பிரம்மாவிடமே கேட்டார்.
சரியான முறையில் விளக்க முடியாது திணறிய ப்ரம்மாவின் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் குமரக் கடவுளாகிய முருகன்.
இது கதை.
ஓங்காரத்தின் உட் பொருளை அறிய விழையும் ஆவல்.

Posted in Spiritual | Tagged , , | Leave a comment

வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதியவர்கள் நால்வர்

வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதியவர்கள் நால்வர்
1.நீலகண்ட சிவாச்சாரியார் -  இவருடைய உரையைப் பின் பற்றுவோர – சைவர்கள்
2.சங்கராச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – ஸ்மார்த்தர்கள்
3.இராமநுஜாச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – வைஷ்ணவர்கள்
4.மத்வாச்சாரியார்       – இவருடைய உரையைப் பின் பற்றுவோர – மாத்துவர்கள்
சிவனை வழிபடுவோர சைவர்கள், ஏனைய மூவகையினரும் வைணவர்களே.
இவர்கள் துவைதம், அத்வைதம,விசிஷ்டாத்வைதம் எனவும் தனித்தனி கொள்கைகளை உடையவரகளாவர்.

Posted in சமயம் | Tagged , | Leave a comment

சிவனார் மனம் குளிர

”சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா!”
இது திருப்புகழ்ப் பாடல் ஒனறன் முதல் வரி.
சிவனார்? என்றால், சிவன் ஆர்?
இதற்கு விடை, இதே திருப்புகழில் உள்ளது.
”சீவன் சிவச் சொரூபம் எனத் தேறி, நான் என்பதற்றுயிரோடூனென்பதற்று வெளி நாதப்பரப்பிரம்ம ஒளி மீதே.”
சிவன் – பரமசிவன்
சிவன் வேறு, சீவன் வேறு அல்ல.
அனைத்தும் ஒன்றே.
சிவனார் மனம் குளிர என்ன நடந்தது?
”சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குரு நாதா.”
சிவ பெருமானுடைய குரு, சிவ பெருமானுக்கு மந்த்ர உபதேசம் செய்கின்றார்.
சிவ பெருமானுக்கே குருவாக வருபவர் அவருடைய மகன் முருகன்.
என்ன மந்த்ரம் உபதேசிக்கப்படுகின்றது?

Posted in General | Tagged , , | Leave a comment

அழகு 10

சந்திரனும், சூரியனும், ஆகாயமும் கூட அழகானவைகளே. மழை பெய்கின்றது. மழைத்துளி வீழ்வதை , அதன் அழகை ரசித்ததுண்டா?
சிறுவர், சிறுமியரைப் பாருங்கள். கை கொட்டிச் சிரித்து , ஆரவாரித்து அவற்றைக் கைகளில் ஏந்தி மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சி கூட அழகுதான்.

அழகுக்கு அழகு என்பார்கள். ஆலயங்களில் விக்கிரகங்கள், சிலைகள், சிற்பங்கள் எனப் பலவற்றைக் காணலாம். அவற்றை உருவாக்கிய சிற்பாசாரியார்கள்
அவற்றைத் தமது உள்ளத்திலே உண்முகமாகக் கண்ட தோற்றங்களை அப்படியே  கற்களிலும், உலோகங்களிலும் உருவங்களாக வடிக்கின்றார்கள்.
அவற்றின் அழகில் ஏதும் குறையில்லை.

எனினும் அவற்றைத் துணிகளால் மூடிப் பல் வேறு ஆபலணங்களை அணிவித்து, மேலும் பல மலர் மாலைகளால் மூடி மறைத்து விடுகையில்
அவற்றின் உண்மையான அழகு காணாமற் போய் விடுகின்றது.  இப்படியாகச் செய்வதனால் யாருக்கு என்ன பயன்?

ஸ்வாமி விபுலானந்தருடைய பாடல் நினைவுக்கு வருகின்றது.

” வெள்ளை நிற மல்லிகையோ, வேறெந்த மா மலரோ, வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளை நிறப்புவுமல்ல, வேறெந்த மலருமல்ல, உள்ளக் கமலமடி உத்தமனார் வேணடுவது.”

Posted in General | Tagged , , | Leave a comment

அழகு 9

பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதனால் அழகாகத் தோன்றுபவைகளும் உள்ளன. திடீரெனக்கண்டவுடன் அழகாகத் தோற்றமளிப்பதும் உண்டு.

நீர் வீழ்ச்சிகள் தம் அழகால் அனைவரையும் கவர்கின்றன. கடலும, கடல் அலைகளும் நம்மைக் கவர்கின்றன.இயற்கையில் அழகைக் காண்பவனே உண்மையான ரசிகன்.

குறிப்பிட்ட பருவத்தில் அனைத்து உயிரினங்களுமே அழகுறக் காட்சி தருகின்றன. ஆண் மயிலுக்குத் தோகை வளர்ந்த பின் அழகு அதிகரிக்கின்றது.
காளை மாடுகள் தமது கொமபுகளும் திமிலும் போதிய அளவில் வளர்ந்ததும்அதிக அழகைப் பெறுகின்றன. கோழிச் சேவல்களைப் பாருங்கள்.
காகம் கூட அழகானது தானே.

Posted in General | Tagged , , | Leave a comment

அழகு 8

அழகான குழந்தை என்கின்றோம். எதனைக் கொண்டு அதனை அழகானது என்கின்றோம? நிறம் காரணமாகவா? கறுப்போ, வெள்ளையோ, சிவப்போ எப்படியாயினும் அழகுதான்.

ராமர், கிருஷ்ணர், வியாசர், திரௌபதை முதலியவர்களும் அழகுதான். அவர்களுடைய நிறமும் கறுப்புத்தான்.கிருஷ்ணா என்ற பெயர் ராமர் தவிர்ந்த ஏனையோருக்குப் பொதுவான பெயராகும்.

மலர்கள் அனைத்தும் அழகானவைகளே.எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.

Posted in General | Tagged , , | Leave a comment

அழகு 7

அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தியானது ஒரு தனித்துவமான தொழிலாக வளர்ந்து விட்டது.

உடலைத் துப்புரவு செய்வது,தோலை மிருதுவாக்குவது, தோல் நிறத்தை மாற்றுவது,தலை மயிரைப் பாதுகாப்பது, கூந்தல் வளர்ச்சி, கருமையாக்கல்,
கண் மை, புருவங்கள் தீடடல, உதட்டுச் சாயம், என்றவாறு பல வேறு வகை உற்பத்திகள்.

அழகு படுத்தும் நிலையங்கள் இரவு பகலாகப் பணியாற்றுகின்றன. இவைகளை அழகு சாதன வியாபாரத்தின் உச்சம் எனலாம்.

நகை அலங்காரம், தலையில் ஆரம்பித்து கால் விரல் வரை வகை வகையான அணிகலன்கள். போதாக் குறைக்கு வகை வகையான ஆடை அலங்காரங்கள்ஈ மற்றும் பாத அணிகள்.

Posted in General | Tagged , , | Leave a comment

பயமின்மை

பயமின்மை என்பது புகை வண்டி என்ஜினைப் போன்றது. அது நமது வாழ்க்கையை மேடு பள்ளங்களிலும் கூட, சரியான பாதையில் தடையின்றி இழுத்துச் செல்கின்றது.
இதில் “பரிவு“ கார்ட்டு வண்டியாகும். அது நம்மை விபத்திலிருந்து பாதகாக்கின்றது. இந்த இரண்டும் ஒருவரிடம் இருப்பது சிறந்த லட்சணமாகும், என்று நான் எனது கீதைப் பேருரைகளில் கூறியிருக்கிறேன்.
சாஸ்திரி அவர்களிடம் இந்த இரண்டு குணங்களும் காணப்பட்டன. அது தெய்வீக சம்பத்து ஆகும்.  – வினோபா பாவே (நன்றி,கல்கி 13-2-1966)

Posted in Spiritual | Tagged , , | Leave a comment