திரும்பும் இடம்

இதனை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
உள்ளே வந்து வெளிச் செல்லும் சுவாசமானது இரு வேறு சமாந்தர ரேகைகள் அல்ல, ஒரு முழு வட்டம் மட்டுமே.
உள்ளே வந்து வெளிச் செல்லும் சுவாசமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் திரும்புகின்றது.
இந்தத் திரும்பும் இடமும் மிகவும் முக்கியமானதாகும்.

இரண்டும் முக்கியமானவை.

இரண்டும் முக்கியமானவை.
வெளிச் செல்லும் சுவாசம.
உள்ளே வரும் சுவாசம்.
இரண்டுமே சமாந்தர ரேகைகளல்ல.
உள்ளே வரும் மூச்சு ஒரு அரை வட்டம்.
வெளிச் செல்லும் மூச்சு ஒரு அரை வட்டம்.

சுழல் வட்டம்

மூச்சானது கீழிருந்து மேல் நோக்கிச் சென்று பின் மேலிருந்து கீழ் நோக்கி வருகின்றது.
இந்த இரு திருப்பு முனைகளும் விழிப்புணர்வுக்கு வழி வகுக்கின்றன.
இந்த முறையானது முந்தியதை ஒத்திருந்தாலும் சிறிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது.
இங்கே இரண்டு மூச்சுக்களுக்கிடையிலான இடைவெளியை நோக்குவதற்குப் பதிலாக திரும்பத் திரும்ப வந்து போய்த் திரும்பும் திருப்பத்தைக் கவனிக்கின்றோம்.
உள்ளே போகும் மூச்சும் வெளியே வரும் மூச்சும் ஒரு வட்டத்தை உருவாக்குகின்றன.

ஒரே ஒரு தியான வழி

இலட்சக்கணக்கான பொது மக்களுக்கு ஒரே ஒரு தியான வழி முறை போதுமானது.
ஆசியாக் கண்டம் முழுவதுமே பலப்பல ஆண்டுகளாக இதே வழி முறையைப் பின் பற்றி இருப்பது கண்கூடு.
சீனா,திபேத்,ஜப்பான்,பர்மா,தாய்லாந்து,இலங்கை இத்தியாதி ஆசிய நாடுகளுள் இந்தியா மட்டும் விதி விலக்காக
இந்த வழியைப் பின் பற்றியவர்கள் ஆயிரமாயிரம்.
விழிப்புணர்வு பெற்றவர்கள் தொகையைக் கணக்கிட முடியாது.
முதலாமிடத்தைப் பெற்ற வழி முறையுடன் புத்த பெருமான் பெயரும் இணைந்து விட்டது.
புத்த பெருமான் காட்டிய வழி என்றவுடன் இந்துக்கள் திகைத்து நின்றார்கள்.
விஞ்ஞான பைரவ தந்திரத்தில் முதன் முறையாகச் சிவ பெருமான் கூறியதாகக் கூடக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தப் புத்தகத்தையும் பௌத்தர்கள் தங்களுடையது என்றனர்.
இந்துக்களுக்கு இது போதாதா?
உண்மையில் இது எந்த மதத்திற்கும் சொந்தமானதல்ல.
சாதாரணமான ஒரு தியான வழி முறை மட்டுமே.
புத்த பெருமான் இதனைப் பாவித்து ஞானம் பெற்றார்.
எனவே இதனை யாரும் பயிலலாம்.
வெற்றி பெறலாம்.

கிடைத்தற்கரிய உண்மை

உங்கள் விழிப்புணர்வு கூர்மையாகும் பொழுது மாயாவுலகம் மறைந்து விடுகின்றது.
அதன் பின்னர் சுவாசம் உள்ளே வந்து வெளியே போவது மட்டுமே உங்கள் உலகமாகி விடும்.
திடீரென இடைவெளி உங்களுக்குப் புரிகின்றது.
அந்த வேளையில் மூச்சு உள்ளே வருவதுமில்லை, வெளியே போவதுமில்லை.
மூச்சு முழுமையாக நின்று விட்டது.
இந்த நிலை தான் கிடைத்தற்கரிய உண்மையை வழங்குகின்றது.

இடைவெளியைக் கண்டு கொள்வீர்கள்

இரண்டு மூச்சுக்களுக்கு இடையிலான இடைவெளியைக் கண்டு பிடிக்க ஆவல் கொண்டால் விழிப்புணர்வு விலகி விடும்.
இடைவெளியைக் காண முற்படுகையில் நீங்கள் மூச்சை முந்திக் கொண்டு செல்ல நேரும்.இவ்வாறு முந்துவதால் உங்கள் நோக்கம் குழம்பி விடும்.
இதனாலேயே புத்தபெருமான் இதைப்பற்றி யாருக்குமே கூறவில்லை.
அவர் ஒரு பாதியை மட்டுமே குறிப்பிட்டார்.மற்றது தானாக நிகழ வல்லது.
நீங்கள் உங்கள் மூச்சை உணர்வதனாலும், அதைப்பற்றி விழிப்புடன் இருப்பதாலும் திடீரென ஒரு நாள் உங்களை அறியாமலே இடைவெளியைக் கண்டு கொள்வீர்கள்.

புத்த பெருமான்

புத்தர் பெருமானும் இந்த மூச்சைப் பின் பற்றும் முறையையே அனுசரித்தார் என அறியக் கிடைக்கின்றது.
இதனால் இது பௌத்த சமயத்திற்கே உரியதாகவும் கருதப்படுகின்றது.
பௌத்த சமயத்தினர் இதனை “ஆனாபபானா“என்றே குறிப்பிடுகின்றனர்.
புத்த பெருமான், மூச்சு உள்ளே வந்து வெளியே போவதை அவதானிக்குமாறு வலியுறுத்துகின்றார்

உள்ளுணர்வும் சுவாசமும்

சுவாசத்தின் மீது உங்கள் மனதை ஒருமுகப் படுத்துங்கள்.உணர்வுடன் சுவாசத்துடன் இணைந்து செல்லுங்கள். சுவாசம் கீழ் நோக்கிச் செல்கையில் நீங்களும் அதனுடன் இணைந்து கீழ் நோக்கிச் செல்லுங்கள்.
சுவாசத்தைத் தவற விட்டு விடாதீர்கள்.சுவாசத்திறகு முன்பாகவோ, பின்பாகவோ செல்லாமல் அதனுடன் இணைந்து செல்ல வேண்டும்.நீங்களே சுவாசமாகி விட வேண்டும்.
உங்களுடைய உள்ளுணர்வும் சுவாசமும் ஒன்றாகி விட வேண்டும்.
சுவாசம் உள்ளே போகையில், நீங்களும் உள்ளே போக வேண்டும்.அப்பொழுது தான் இரண்டு சுவாசங்களுக்கு இடைப்பட்ட வித்தியாசம் உங்களுக்குத் தெரிய வரும்.
உள்ளே சுவாசம் போகும் பொழுது நீங்களும் உள்ளே போய் அதனுடன் சேர்ந்தே நீங்களும் வெளியே வர வேண்டும்.

இடை வெளியைக் கண்டு கொண்டாலே போதுமானது.

இடை வெளியைக் கண்டு கொண்டாலே போதுமானது.
வேறொன்றும் தேவையில்லை.
உண்மையைக் கண்டு கொள்வது சுலபமாகிவிடும்.
இது மிகவும் சுலபமானதே, ஏனெனில் இறப்புப் பிறப்பற்ற உண்மை நிலை தெளிவாகின்றது.
இவைகளெல்லாம் புதியவைகளல்ல,ஏற்கெனவே இருந்தவைகள்தாம்.
நாம் தான் இவற்றை அவதானிப்பதில்லை.
முதலில் மூச்சு வந்து கொண்டிருக்கின்றது.
மற்றெல்லாவற்றையும் மறக்க வேண்டும.
இதோ மூச்சு உள்ளே வருவதனை அவதானிக்க வேண்டும்.
மூக்கில் படுகின்றது, உள்ளே போய் விட்டது.

சுவாசப் பயிற்சி – தொடர்ச்சி

சாதாரணமாக நாம் சுவாசத்தை உள்ளெடுப்பதற்கும்,வெளியே விடுவதற்கும் இடையிலான சிறு இடைவெளிகளில் எண்ணம் தலையெடுப்பதில்லை.அந்த வேளைகளில் நாம் இவ்வுலகில் இருப்பதுமில்லை.சுவாசம் வேலை செய்யாத வேளைகளெல்லாமே மரணித்த வேளைகளே. இது மிகச் சிறு இடைவெளியாக இருப்பதனால் இது யாருக்கும் தோன்றுவதிலலை.
தாந்திர யோக முறைப்படி வெளி விடப்படும் மூச்சு மரணமாகவும்,மீண்டும் உள்ளெடுக்கப்படும் மூச்சு மறு பிறப்பாகவும் கொள்ளப்படுகின்றது.இதன்படி நாங்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு கணமும் பிறந்து, பிறந்து, இறந்து கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் செய்ய வேணடிய ஒரே வேலை,இந்த இடை வெளியை இடை விடாது அவதானிப்பது மட்டுமே.
இந்த முறையிலும் கூட சிறு சிறு மாற்றஙகளுடன்,  வேறு வேறு தியான முறைகள் பல வேறு பிரிவினராலும் பயிலப்பட்டு வருகின்றன.